சாரல்

நான் படித்தவைகளும், ரசித்தவைகளும்..

ராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா? மே 10, 2008

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 8:22 நான்

சொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

மீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.

வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை. இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா? யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.

அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.

இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும்? பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை? என்றார் கொளத்தூர் மணி.

தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி:

கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.

கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.

புதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:

மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.

பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.

சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா?

சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.

தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

நன்றி : கீற்று

 

ஆன்லைன் வியாபாரமும் அன்றாடங் காய்ச்சிகளும்… மே 10, 2008

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 8:13 நான்

பராளுமன்றத்தில் மீண்டும் கூக்குரல். எலியும் பூனையும் கைகோர்த்து நின்றன. இந்த முறை விலைவாசி உயர்ந்துபோனதாக குற்றச்சாட்டு.

“வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா….” என்கிறார் நிதியமைச்சர்.

“விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதற்கெல்லாம் மந்திரக்கோல் எதுவும் இல்லை,” என்கிறார் பிரதமர்.

வர்த்தக அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கை செய்தி.

பாராளுமன்றத்தில் எழுந்த கூக்குரல் சாதாரணமென்று அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. வெங்காயம் விலையேறிப் போனதற்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர்களும், அந்த தேர்தலில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற பெரு மூச்சுடன் இன்றைய பாராளுமன்றத்தில் நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோ இருப்பதை தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய ஆளும் கட்சி இதற்கு பொருத்தமான விலையை வரப்போகும் தேர்தல்களில் கொடுத்தாக வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. வசதி படைத்த இந்தியர்களைக் காட்டிலும் அன்றாடங் காய்ச்சிகள் தான் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்கிறார்கள் என்பதால் ஆளும் கட்சியின் வயிற்றிலும், கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றிலும் புளி கரைக்கத் தொடங்கிவிட்டது.

விளைவு கூட்டணிக் கட்சிகள் பிரிந்து மறுபடியும் கூட வாய்ப்பு இருக்கிறது. புதிய வடிவத்தில்.

ஆக்கப்பூர்வமாக செயல்பட மறந்துபோன அரசு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மத்தியதர வகுப்பினருக்கு வரிச்சலுகைகள், ஆறாவது ஊதியக்கமிஷன், விவசாயக்கடன் தள்ளுபடி, சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் என்றெல்லாம் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடப்பாரையை விழுங்கி விட்டு இஞ்சிக் கஷாயம் குடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட விலைவாசி உயர்வு அளவு கடந்த 13 மாதங்களில் இல்லாத 6.68 சதவீதத்தை எட்டியிருக்கிறது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள், இரும்பு, உருக்கு என்று விலைவாசி உயர்வின் கொடுங்கரங்களில் சிக்கிய பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

இப்போதைய விலைவாசி உயர்வில் கவலைதரக்கூடிய விஷயம் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இருக்கும் அதிகமான இடைவெளிதான். மொத்த விற்பனையாளர்கள் பொருட்களைப் பதுக்கிவைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறார்கள்.

பதுக்கல்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு அந்த அதிகாரம் இருந்தால் நாளைக்கே நடவடிக்கை எடுப்பேன் என்றும் நிதியமைச்சர் கூறுகிறார் பிரதமரின் முன்னிலையில்.

டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சி குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிகாரம் கிடைக்கிறது. நாளைக்கே அவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுப்பான்.

இரு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நிறுவனங்கிளுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தம் தான் ஆன்லைன் வர்த்தகம். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது இணையதள விற்பனைக்குள் வந்துள்ளன. ஊக வணிகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடுதான் ஆன்லைன் வர்த்தகம் என்பது. இதனுடைய இன்னொரு முகம் ரூபாயின் மதிப்பை உள்நாட்டில் செல்லாக்காசாக்கும் முயற்சி.

பொதுவாக விலையை தீர்மானம் செய்யும் காரணிகள் பொருட்களின் தேவை (DEMAND) எவ்வளவு என்பதும், சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் வந்திருக்கின்றன (SUPPLY) என்பவையும்தான்.

ஒரு பருப்பு வியாபாரி தன்னிடம் இருக்கும் 5 டன் உளுத்தம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு விற்க இரண்டாவது வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். வெறும் ஒப்பந்தம் மட்டும்தான். சரக்கு இடம் மாறுவதில்லை.

ஒரு மூன்றாவது வியாபாரி கிலோ ஐம்பது ரூபாயானாலும் பரவாயில்லை என்று கேட்கும்போது 30 ரூபாய்க்கு தான் விற்ற அதே பருப்பை 40 ரூபாய்க்கு ஒப்பந்தம்போட்டு வாங்கி 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்.

ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டுவிடுவதால், அரசின் உணவுப்பொருள் வர்த்தகக் கழகம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கமுடியாமல் முடக்கப்பட்டு விடுகிறது.

பதுக்கலை ஒழிக்கவேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். வாக்குச்சாவடிக்கு மக்கள் போகும்போது மக்களுக்கு பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். மாநில அரசு, மத்திய அரசு என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை.

வியாபார சக்திகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சந்தையில் விளையாட அனுமதித்து விட்டு தற்போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வார்த்தைகள்.

பத்திரிக்கைகள் பணவீக்கம் என்று சுருக்கமாக தீர்ப்பு எழுதிவிடுகின்றன. பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பொருட்களின் விலை 7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். போனவருஷம் இதே மாதத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருஷம் இதே மாதத்தில் 107 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். பணவீக்கத்தை கணக்கிடும் பணியை இந்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.

6% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகளின் வைப்பீட்டுக்கும், கடன் பத்திரங்களுக்கும் 6% வட்டி கிடைத்தது. இது RISK FREE RETURN. பங்குச்சந்தையில் வரும் வருமானம் இதற்கு நேர்மாறானது. வங்கியைவிட பலமடங்கு வருமானம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

வங்கி வட்டிவிகிதம் குறையத்தொடங்கியதும் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையை நோக்கி திருப்பி விட்டனர். இதனால் SENSEX நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டு போனது. நம்முடைய நிதியமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் என்ற கொள்கைகளின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளில் இருந்து நம்முடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் சுயசார்புத் தன்மையை நாம் இழந்துவிட்டோம்.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதையோ, விவசாயத்திற்கு அடிப்படையான மலிவான உடலுழைப்பு இந்தியாவில் நிறைய இருக்கிறது என்பதையோ நம்முடைய ஆட்சியாளர்கள் அடியோடு மறந்துபோனதுதான் இன்றைய சோகம்.

கலப்புப் பொருளாதாரத்தையும், கிராமத் தொழில்களையும் ஆதரித்த நம்முடைய பழம்பெரும் தலைவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. தாராளமயம் என்ற பெயரில் கிராமத் தொழில்களை அழித்து, வேலையிழந்த தொழிலாளர்களை நகரங்களை நோக்கி நகரவைத்து புதுப்புது சேரிகள் உருவாக வழிசெய்ததுதான் அண்மைக்கால ஆட்சியாளர்களின் சாதனை.

நுகர்வுக்கலாச்சாரத்தை மக்களிடையே புகுத்தி அதன்மூலம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தில் மயங்கியதும் இதே ஆட்சியாளர்கள் தான்.

நாடு முன்னேறிக் கொண்டிருந்தாலும் அதன் பயன் ஏழைமக்களைச் சென்றடையவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதும் இதே ஆட்சியாளர்கள்தான்.

நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விளை நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையில்லை. ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மொத்த மழையில் 80 சதவீதம் நான்கே மாதங்களில் பெய்து தீர்த்து விடுகிறது. இந்த மழைநீரை சேமிக்கவும் பகிர்ந்தளிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள்தான் இன்றைய இந்தியாவின் முதல் தேவை. நமது விவசாயிகளின் துன்பம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்களின் தற்கொலைகளின் பின்னணியே அந்தக் கதைதான்.

இந்தியாவில் உணவுப்பொருள் விநியோகத்தில்தான் குறைபாடே ஒழிய உணவு உற்பத்தியில் அல்ல. உணவு உற்பத்தியில் மிகக் குறைவான முன்னேற்றம், விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை, உணவு தானியங்களின் சேதாரம் ஆகியவை இந்நாட்டின் தலையாய பிரச்சினைகள் ஆகும்.

இந்தியர்களின் ஆதாரத் தொழிலான வேளாண்மைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அரசு கொடுக்காதவரை எதுவுமே பலனளிக்கப் போவதில்லை.

நம்முடைய ஊரில் உளுந்து பயிரிடும் விவசாயி கிலோ 18 ரூபாய்க்கு தன்னுடைய உற்பத்திப் பொருளை விற்றுவிட்டு, அதே ஊரில் கிலோ 36 ரூபாய்க்கு உளுத்தம்பருப்பை வாங்கவேண்டிய அவலம்தான் இன்றைய பிரச்சினை.

உற்பத்தியிலோ விற்பனையிலோ எந்தவித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்கள் ஊகவணிகத்தின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அரசு அனுமதிப்பதிக்கும் வரை அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கப் போவதில்லை.

நன்றி : கீற்று

 

மக்கள் தொலைக்காட்சிக்கு ஐ.நா (UNFPA) விருது ஏப்ரல் 7, 2008

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 9:17 நான்
Tags:

பெண் குழந்தைகளை நேசிக்க ஊக்கப்படுத்தும் சிறந்த ஊடக முயற்சிகளுக்கு ஐ.நா. மக்கள் தொகை நிதியமைப்பு (United Nations Population Fund - UNFPA) சார்பில் “லாட்லி’ விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2007-ம் ஆண்டில் “மண்ணைக் காக்க பெண்ணைக் காப்போம்” என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த விருது அண்மையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சுமார் 3650 தடவை ஒளிபரப்பப்பட்டது.

வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மக்களுக்குத் தேவையான, அவர்களை நல்வழிப்படுத்துகிற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம். புகைப்பழக்கம். குடிப்பழக்கம், வரதட்சிணை போன்ற தீய வழக்கங்களுக்கு எதிரான மற்றும் தூய்மைக்கு ஆதரவான சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, எங்கள் பணி மேலும் சிறக்க உதவும் என மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமணி

 

நான் ஒரு மநுவிரோதன் நூல் வெளியீட்டு விழா மார்ச் 23, 2008

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 11:52 நான்
Tags:

ஆதவன் தீட்சண்யாவின் ‘நான் ஒரு மநுவிரோதன்’ நூல் வெளியிட்டு விழா கடந்த 19-03-2008ம் தேதி புதன்கிழமை சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.

புதுகை பூபாளம் புத்தகப் பண்ணையும், கீற்று.காம் இணையதளமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மினர்வா (கீற்று.காம்), ஆய்வாளர் வ.கீதா, மருத்துவர் ஜெயராமன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சம்பத், நாடகவியலாளர் பிரளயன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பதிப்பாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அவர்களது உரைகள் கீற்று தளத்தில் உள்ளது - http://keetru.com/audio/manu_virothan/aadhavan.php

 

யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி….. மார்ச் 18, 2008

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 6:07 நான்
Tags:

“…யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. …”

“…சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது. இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? …”

இந்த வரிகள் ஆதவன் தீட்சண்யா அவர்களின் புத்தகமான “நான் ஒரு மநு விரோதன்” புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகள்.

நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா
(ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள்)

நாள் : 2008 மார்ச் 19

நேரம் : மாலை 5 மணி

இடம் : தேவநேய பாவாணர் நூலக அரங்கு, சென்னை-2

புத்தகத்திலிருந்து:

“….வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?…”

“… ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது….”

“..ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்…”

 

கோலாகலமாகத் தொடங்கியது “சென்னை சங்கமம்” ஜனவரி 11, 2008

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 11:02 நான்
Tags:

“ஞாயிறு போற்றுதும்’ என்ற பிரமாண்டமான கலைநிகழ்ச்சியுடன் சென்னை சங்கமம் கலை விழா வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி- பண்பாட்டுத்துறை, தமிழ் மையம் ஆகி யவை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் கலைவிழாவை முதல்வர் கரு ணாநிதி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கலைஞர்களை அழைத்து வந்து சென்னையின் பல் வேறு இடங்களில் கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வர வேற்பை அடுத்து இரண்டாவது ஆண் டாக தற்போது பொங்கல் பண்டி கையை முன்னிட்டு சென்னை சங்கமம் கலைவிழா நடத்தப்படுகிறது.

தப்பாட்டமும்- டிரம்சும்…: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பழை மையும்-புதுமையும் சங்கமிக்கும் நிகழ்ச் சியாக ஞாயிறு போற்றுதும் கலை நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின் பாரம்பரிய இசையான தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட் டம், பொய்க்கால் குதிரை, கோலாட் டம் ஆகியவற்றுடன், நாட்டுப்புற இசையும், கர்நாடக இசையும், மேற்கத் திய இசையும் சங்கமித்த விழாவாக “ஞாயிறு போற்றுதும்’ கலை நிகழ்ச்சி அமைந்திருந்தது.
சுமார் 120 குழந்தைகள் பல்வேறு தொழில் சார்ந்த இசைக் கலைஞர்களு டன் ஒரே மேடையில் நடத்திய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தது.
போகிப் பண்டிகையில் தொடங்கி பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங் கல், காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகையின் 4 நாள் நிகழ்ச்சிகள் ஒரே மேடையில் 120 நிமிஷங்களில் கலை நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன.

பொங்கல் பண்டிகையின் பாரம்பரிய சிறப்புகளை விளக்கியதுடன், இந்த விழாக்கள் கால மாற்றங்களால் ஏற்பட் டுள்ள தவறுகளை சுட்டிக்காட்டியது டன், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இந்த விழாவை எப்படிக் கொண்டாட லாம் என ஆலோசனை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்தது அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெறும் வகையில் நிகழ்ச்சி அமைந்தி ருந்தது.

1300 கலைஞர்கள் அடுத்த ஒரு வாரத் துக்கு சென்னையின் பல்வேறு பூங்காக் களில் நடத்த உள்ள கலை நிகழ்ச்சிக ளின் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைந்திருந்தது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் கொட் டும் பனிப் பொழிவுக்கு இடையே 120 நிமிஷங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிறந்த இசை மழையாக இருந் தது என்றால் அது மிகையாகாது.

ஞாயிறு போற்றுதும் நிகழ்ச்சியை இயக்கிய குமரவேல், இசை அமைத்த பால் ஜேக்கப், அரங்கு வடிவமைத்த கதிர், பாடலாசிரியர் அறிவுமதி உள் ளிட்டோரை முதல்வர் கருணாநிதி பரி சுகள் வழங்கி பாராட்டினார்.

மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச் சியை தமிழ் மையத்தின் இயக்குநர் ஜெகத்காஸ்பர் தொகுத்து வழங்கினார்.

சென்னை சங்கமம் இணையத்தளம் - http://www.chennaisangamam.com/

 

தமிழ்த் திரையுலகின் தோற்றமும் தடுமாற்றமும் டிசம்பர் 14, 2007

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 3:07 நான்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1919-லிருந்தே தமிழகத் திரைத்துறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தாலும் அது தன் அடையாளத்தைப் பெற்றது 1931ல்தான். திரையில் தமிழ் மொழியை உச்சரிக்க ஆரம்பித்த பின்னரே இம்மாற்றம் நிகழ்ந்தது. முதல் படமான கீசக வதம் 1916-ல் தமிழகத்தில் வெளி வந்த போது அதற்கு மொழி கிடையாது. வெறும் மவுனப் படம் மட்டுமே. அந்த ஆரம்பகாலப் படங்களும் சூரிய ஒளியிலேயே படம் பிடிக்கப்பட்டது.

படங்கள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் எடுக்கப்பட்டன என்பதால் நடிகர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்தோடும். சூரியக் கதிர்கள் கண்களை கூசச் செய்யும். எனவே, நடிப்பவர்கள் கண்களைச் சுருக்குவதும், இமைகளை அடிக்கடி மூடுவது என்பதும் இயல்பாக இருந்தது. கூடவே புராணப் படங்கள் என்பதால் காலில் செருப்பு அணிய முடியாமல் தரைச் சூட்டில் கால்கள் கொப்பளிக்கும் நிலை. மகிழ்ச்சி, காதல், உற்சாகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டங்களில்கூட சுடும் தரையில், கொப்பளித்த கால்களில் ஏற்பட்ட வலியால் முகச்சுளிப்பையும் சேர்த்தே படம் பிடிக்க வேண்டி இருந்தது.

பெருத்த வேதனையில் படப்பிடிப்பு நடந்த அந்நாட்களில் பெண்கள் படங்களில் நடிக்கத் தயங்கினர். நாடக நடிகைகளும் புகைப்படக் கருவி தங்களின் அழகை அபகரித்து விடும் என்ற நம்பிக்கையில் நடிக்க மறுத்து விட்டனர். எனவே, ஆரம்ப காலத்தில் துணிந்து நடிக்க வந்த ஐரோப்பியப் பெண்களையும், ஆங்கிலோ-இந்தியப் பெண்களையுமே நடிக்க வைத்தனர். இதனால்தான் 1917-ல் நடராச முதலியார் தயாரித்து இயக்கிய ‘திரௌபதி வஸ்திராபரணம்’ மவுனப் படத்தில் துச்சாதனனால் துகிலுரியப்படும் திரௌபதியாக நடித்தவர் ஒரு ஐரோப்பியப் பெண். அக்காலத்தில் மிக அதிகமாக ஊதியம் பெற்று நடித்தவர் ‘லியோச்சனா’ எனும் ஆங்கிலோ இந்தியப் பெண். இவரின் இயற்பெயர் மரைன் ஹில்.

மேலைநாட்டினர் செய்த ஆராய்ச்சியின் விளைவாக ஊமைப்படங்கள் பேசும் படங்களாக உருமாறின. பம்பாய் பட நிறுவனமான ‘இம்பீரியல் மூவிடோன்’ அதிபர் அர்தே ஷீயர் ஈரானி இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம்ஆரா’வைத் தயாரித்தார். இவரே தமிழின் முதல் பேசும் படமான “காளிதாஸ்’ திரைப்படத்தைத் தயாரித்தவர். சென்னை சென்ட்ரல் திரையரங்கில் 21-10-1931-ம் நாள் இப்படம் திரையிடப் பட்டது.

1934-ல் ராஜா சான்டோ இயக்கத்தில் வெளிவந்த ‘மேனகா’ திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இவ்வாறு இத்தனை வலிகளையும் வேதனைகளையும் சுமந்துதான் தமிழ்த்திரைப்படம் பேசத்தொடங்கி முழுமை பெற்றது.

பெண்கள் நடிக்கப் பயந்து போய் ஓடி ஒளிந்ததும் மறுத்ததுமான காலத்தைக் கடந்து இன்று தமிழ் சினிமா முழுவதுமே பெண்களின் கவர்ச்சிக் காட்சிகளால் நிரம்பி வழிகின்றன.

அந்தக் கவர்ச்சியின் ஓர் அத்துமீறல்தான் அண்மையில் வெளிவந்த ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் பெண்மையை பொத்தாம் பொதுவாகக் கேவலப்படுத்தி இருப்பது. நாயகியை ஐந்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும் பாலியல் வல்லுறவு கொள்வதாகக் காண்பிக்கப்படும் அக்காட்சி படுகேவலம். ஆடைகளை அவிழ்ப்பதும், உள்ளாடைகளைக் களைவதும் என்பதாக அமைந்திருக்கும் அந்தக் காட்சியின் முடிவு தமிழ்ச்சினிமாவினை உமிழத் தோன்றுகிறது. இத்தகைய காட்சி எந்தத் தமிழ்ச் சினிமாவிலும் இதுவரையில் வரவில்லை.

திரைப்படங்கள் எதார்த்தம் கலந்தாக இருக்க வேண்டும் என்பது சரியானதுதான் என்ற போதும் அவை கலாச்சார, பண்பாட்டுத் தளத்தினைச் செப்பணிடுவதாக இருக்க வேண்டும் என்பதுவும் முக்கியம். பெண்கள் மத்தியில் ‘பருத்திவீரன்’ படம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், பெண்கள் அமைப்புகள் இத்திரைப்படத்தை எதிர்க்காமல் போனது வியப்பாகவே இருக்கிறது. சமூகப் பொறுப்பு என்கிற வரையறைக்கு கட்டுப்படாதவர்கள்தான் இத்தகைய படங்களை எடுக்கவும் முடியும். அமீர் அந்தப் பட்டியலில் முதல் நபராக இருக்கிறார்.

நான்கு சுவர்களுக்குள் நடக்கிற படுக்கையறைக் காட்சியை நாடெங்கும் திரையில் ‘நீலப்படம்’ போன்று காட்டுவதில் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் காலாவதியாகிப் போனது என்பதை இப்படம் நிரூபித்து இருக்கிறது. சமூகப் பொறுப்பில்லாத படங்கள் பொழுது போக்குச் சாதனம் என்கிற சராசரியான வடிவத்தை மீறி ‘காமத்திற்கு வடிகால்’ என்று உருவம் கொள்வது கண்டனத்திற்கு உரியது.

பருத்திவீரன் படத்தில் வரும் காட்சியை எல்லாம் காண்பித்து சமூகத்தில் ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஆனால், சமூகச் சீரழிவு அதிகம் என்பதாலேயே இதைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

சமூக உணர்வுள்ளோரும், பெண்கள் அமைப்புகளும் எதிர்க்காமல் விட்டதால், இது போன்ற படங்களால் ஏற்படும் கொச்சைத்தனம் உச்சம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உணர்வு பெறுவோம்!
உறுதியுடன் எதிர்ப்போம்!!
இப்போக்கு வளராமல் தடுப்போம்!!!

 

Madani - The Scapegoat டிசம்பர் 14, 2007

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 2:33 நான்

சிறுபான்மையின மக்களின் மீது அரசு மற்றும் காவல்துறை நடத்தும் அத்துமீறல்கள் குறித்தான ஆவணப் படம்

மதானி - கைதியின் கதை

 

பாசிசத்தின் பழைய ஒப்பனை - ஆனாரூனா டிசம்பர் 14, 2007

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 1:11 நான்

பண்பாடுள்ள மக்களைக் காட்டு மிராண்டிகள் வெற்றி கொள்வது இயல்புதான். திராவிடர்கள் ஆரியர்களிடம் வீழ்ந்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் நேருவும், ராகுல சாங்கிருத்தியாயனும். வெற்றிதான் முக்கியம்; வழிமுறைபற்றிக் கவலைப் படவேண்டாம் என்றுதான் சாணக்கியனிலிருந்து சோவானவர்கள் வரை - அக்கிரகாரத்து அறிவாளிகள் கூட்டம் - உபதேசிக்கின்றன.

ஆரிய இதிகாச, புராண, இலக்கியக் கொள்கை கூட தர்மயுத்தம் குறித்தோ, யுத்த தர்மம் குறித்தோ கரிசனம் கொள்வதில்லை. நாங்கள் போர் தொடுக்கப் போகிறோம்; ஆதலால் உங்கள் நாட்டிலுள்ள கால் நடைகள், (ஆவினங்கள்) அவற்றைப் போன்றே சாது வான (!) பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையோர், கர்ப்பிணிகள் போன்றவர்களைப் பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத் துங்கள் (புறம்) என்று பகை நாட்டரசுக்கு ஓலை அனுப்புவதும், பகைவரின் மரணத்தைக் கூட கண்ணீரால் கௌர விப்பதும் திராவிட - தமிழினப் பண்பாடாகும்.

மரண வேதனையில் துடிப்பவனிடம்கூட அவனுடைய பலவீனத்தைப் பயன்படுத்திப் பிச்சை கேட்கும் தோரணையில் அவனுடைய புண்ணியத்தின் பலனை அபகரித்து, கொன்று தீர்ப்பதும், அது தான் தர்மம் என்று உபதேசிப்பதும் ஆரியக் குணமாகும் (கீதை)

கலைஞரின் தலையை வெட்டிவந்தால் பரிசு தருவேன் என்று அறிவித்த வேதாந்தியோ, அதை மௌனமாய் ரசித்த குருமூர்த்தி, சோ, சுப்பிரமணியசாமி, கணேசன் அத்வானி, போன்ற ஆரியக் குஞ்சுகள் இறந்தால்கூட மனம் உடைந்து வருந்துவதுதான் பெரியார், அண்ணா கலைஞர் போன்ற திராவிட இனத் தலைவர்களின் இயல்பு.

இழவு வீட்டில்கூட பிடுங்கியவரை லாபம் என்று கருதுவதுதான் அவாள்குல வழக்கம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச் செல்வன் மறைவுக்குத் தமிழக முதல்வர் கலைஞர் செலுத்திய கவிதாஞ்சலி வேத புரத்தாரையும் வேதா இல்லத்தாரையும் வழக்கம்போல் அவர்களுடைய சிறுமையை வெளிப்பட வைத்திருக்கிறது.

“தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவருக்கு எப்படி அஞ்சலி செலுத்தலாம்? கருணாநிதி அரசைக் கலைக்கவேண்டும். ஆளுநரிடம் அறிக்கை தருவோம், பிரதமரிடம் வலியுறுத்துவோம்’’ என்று அக்கிரகாரத்து மனிதர்கள் தாவிக் குதிக்கிறார்கள்.

அரசதிகாரம் தங்கள் இனத்திடமே இருக்க வேண்டும் என்று அவர்கள் தவிப்பதும், தகிப்பதும், நமக்குப் புரிகிறது. அதற்காக நிர்வாண ஊர்வலம் நடத்தலாமா? காந்தியக் கொள்கையை, வர்ணாஸ்ரம தர்மத்தில் அவருக்குள்ள பிடிப்பை, கடுமையாக எதிர்த்தவர் தந்தை பெரியார்,

சனாதனிகளின் சாம்ராஜ்யத்தில் ஜனநாயகம் இருக்க முடியாது என்பதால் இந்திய சுதந்திர தினத்தையே துக்க தினம் என்று அறிவித்தவர் தந்தை பெரியார்.

ஆனால், அதே பெரியார் தான் காந்தியின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தார். காந்தியடிகளின் நினைவைப் போற்றும் விதமாய் இந்தியாவுக்குக் ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்டுமாறு பரிந்துரைத்தார்.

காமராசர் தலைமையிலான காங்கிரசை எதிர்த்து அரசியல் இயக்கம் நடத்திய போதிலும் காமராசரின் அருங்குணங்களைப் பாராட்டத் தவறியதில்லை அறிஞர் அண்ணா.

காமராசர் வாழ்ந்த போதே, அவருக்கு எதிரான அரசியல் பேசிய காலத்தில்தான், திராவிட முன்னேற்றக் கழகம் அவருக்குச் சிலை எழுப்பி விழா எடுத்தது.

கலைஞர் இல்லாமல் இருந்திருந்தால் காமராசரின் மரணம் கூட மௌனத்தில் மூழ்கடிக்கப் பட்டிருக்கும். அன்றைய அரசியல் சூழ்நிலை அப்படித்தான் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கால கட்டத்தில் கலைஞர் அரசு கவிழ்க்கப் பட்டதற்குக் காமராசர்மீது கலைஞர் கொண்டிருந்த பற்றும் ஒரு காரணமாகும்.

அக்கிரகாரத்து பெரியவர் ராஜாஜியின் அரசியல், ஆன்மீகக் குலதர்மக் கொள்கைகளைத் திராவிட இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வந்த போதிலும், அவரது தனித் தன்மைகளை மதிக்கத் தவறியதே இல்லை. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று கருதுவது திராவிட இனத் தலைவர்களின் பண்பாடு.

ஆரியக் குஞ்சுகளை அளவுக்கு அதிகமாகவே கௌரவிக்கிறார் கலைஞர் என்று தமிழ்ச் சான்றோர் பேரவை மேடைகளிலும், கலைஞரிடம் நேரிலேயும் நாம் கூட வருத்தம் தெரிவித்ததுண்டு.

அண்ணா அறிவாலயத்தில், அக்கிரகாரத்துக் கவிஞர் வாலிக்கு, கலைஞர் விருது வழங்கிய விழாவில் முன் வரிசையில் என்னைப் பார்த்த கலைஞர், “வாலி போன்றவர்களுக்கெல்லாம் நான் விருது வழங்கலாமா என்று நண்பர் அருணாசலம் போன்றவர்கள் கேட்கலாம்… என்று தமது உரையைத் தொடங்கிய கலைஞர், வாலிபோன்றவர்களும் தமிழில்தானே எழுதுகிறார்கள். ஞானசம்பந்தரின் கருத்துக்கள் பிடிக்காமல் இருக்கலாம். அவர் பேசும் தமிழை எப்படி வெறுக்க முடியும் என்று என் போன்றவர்களைச் சமாதானப் படுத்தினார்.

நோயை எதிர்ப்பது நோயாளியைக் கொல்வதல்ல. எதிரியை வீழ்த்துவது என்பது அவரிடமுள்ள கசப் புணர்வைத் தகர்ப்பதில்தான் இருக்கிறதேயன்றி, தனி மனிதக் கொலையில் இல்லை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் - இதுதான் தமிழர் பண்பாடு.

மனுவாதிகளுக்கு இந்த மனித நாகரிகம் புரிவ தில்லை.

“அழுகிறவனிடம் அபகரி
புலம்புகிறவனிடம் பிடுங்கு
புகலற்றவனைத் தீர்த்துக்கட்டு…’’

இம்மாதிரியான வக்கிர உணர்வுகளின் உறைவிடம் தான் அக்கிரகாரம் என்று நமக்குத் தெரியும் என்பதால்.

‘கலைஞர் அரசை ‘டிஸ் மிஸ்’ செய் என்கிற அற்பத் தனங்கள் நமக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ தரவில்லை.

ஆனால், வேறுசில சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்துகின்றன. இருள்நீக்கி சுப்பிரமணிய சங்கராச்சாரியை அன்றைய முதல்வர் ஆணைப்படி கைது செய்யப்பட்டபோது வடஇந்தியப் பார்ப்பனர்கள் கூடத் துடித்தார்கள். அப்போதும் கூட கைது செய்தவர்மீது அவர்கள்தம் கோபத்தைக் காட்டவில்லை. இது சோனியா காந்தி சதி, போப்பாண்டவர் சதி என்று எங்கெங்கோ பாய்ந்தார்களே தவிர கைது நடவடிக்கையின் பின்னணிகளைப் புறந்தள்ளிவிட்டு, இன உணர்வை ஒன்று திரட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்.

அந்த இன உணர்வு தமிழர்களிடம் இருக்கிறதா?

‘கிரிமினல்’ சங்கர் நேபாளத்தில் மன்னராட்சி நடந்த காலத்தில் - 1996இல் - அங்கே போய் “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு இந்து சாம்ராஜ்யத்துக்காகப் போராடுகிறார். ஒவ்வொரு இந்துவும் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்’’ என்று தான் பேசியதாகத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனிடம் சொல்லிப் பெருமிதம் கொண்டாராம். ’அவாள்’ பார்வையில் பிரபாகரன் ஒரு ‘இந்து’ இந்துக்களின் ஆதரவாளர்களான, இரட்சகர்களான, இந்து தர்ம சீலர்கள் தமிழீழ விடுதலையை எதிர்ப்பது ஏன்? புலிகளின் இயக்கம் தடை செய்யப்படவேண்டும் என்று குதிப்பது ஏன்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் மரணத் துக்காகக் கருணாநிதி கண்ணீர் விடுவது ஏன்? - என்று குதர்க்கம் பேசுவது ஏன்?

அவர்களுடைய நோக்கம் இந்துக்களின் நலன் அல்ல. மத நம்பிக்கையுள்ள சூத் திரர்களின் அடிமைப் புத்தியை ‘இந்து’ என்கிற பெயரில் ஆரிய தாசர்களாக மாற்றுவதுதான்.

இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதையோ, ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதையோ விடுதலைப் புலிகள் கூட ஆதரிப்பதில்லை. ராஜீவ் காந்தி படுகொலை பற்றிய புலன் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டு, உண்மையை மாத்திரமே தெரிவது என்று தொடர்ந்தால், சுப்பிரமணியம் சாமி, சந்திரா சாமி, நரசிம்மராவ், முதலாம் ‘புஷ்’ சி.ஐ.ஏ… என்று ஒரு பட்டியலே நீளக் கூடும்.

‘முதலாம் புஷ்’ நடத்திய ஈராக் போரின்போது அமெரிக்கப் போர்விமானங்களுக்கு இந்தியாவிலே ‘பெட்ரோல்’ நிரப்ப அனு மதித்திருந்தது அன்றைய சந்திரசேகர் அரசு.

“அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல்’ நிரப்ப அனுமதிப்பது, அமெரிக்காவின் போர் வெறியை இந்தியா ஆதரிப்பதாக அர்த்தப்படுத்தப்படும்.

இந்தியாவின் நடுநிலைக் கொள்கைக்கு அது எதிரானதாகும். எனவே அன்னியப் போர் விமானங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது’’ என்று ராஜீவ்காந்தி கண்டனம் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தியின் கண்டனம் குறித்து முதலாம் புஷ்ஷிடம் அமெரிக்க செய்தியாளர்கள் கேட்ட போது, “அதை (ராஜீவ் காந்தியின் நடவடிக்கையை) நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்’’ என்று அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாதது ஏன்?

எதையும் ஆரிய நலனுக்கு ஆதரவாக மாற்றும் அக்கிரகாரத்து அறிவு ஜீவிகளின் அணை கடந்த ஆசைதான் தமிழ்ச் செல்வனின் மரணத்தின் போதும் வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நிலவும் போர்ச் சூழலில், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் வகிப்பவர் தமிழ்ச் செல்வன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்.

அங்கே ஏற்படும் அமைதி இந்திய நலனுக்கும் உகந்தது என்று நல்லிதயத்தோடு சிந்திக்கும் எவருக்கும் தமிழ்ச் செல்வனின் மறைவு பேரிழப்பாகவே தெரியும். அதிலும் தமிழ்ச் செல்வன் ஒரு தமிழன் என்கிற உணர்வு கொண்டால்?

போரழிவு நின்று சமாதானம் நிலவுவாதா என்கிற மனிதாபிமானமும், தமிழினம் வதைபடுகிறதே என்கிற பந்தபாசமும் கலைஞருக்கு இருக்கிறது எனவே அவர் அரசியல் சாசன விதிப்படி ஆட்சியில் இருக்கக் கூடாது என்று கூச்சலிடுகிறவர்கள் ‘யார்’ அவர்களின் நோக்கம் என்ன என் பதைத் தமிழர்கள் நன்றே அறிவார்கள்.

காந்தியைக் கொன்ற - அதை வரவேற்ற இன்றுவரை கோட்சே கும்பலைக் கண்டிக்காத ஒரு பாசிசக் கூட்டம், ஜனநாயக வேடமிட்டாலும், ‘இந்து’ வேடமிட்டாலும், எந்த ஒப்பனையில் வந்தாலும் கபடத்தனம் அறியப்படாமல் போகாது.

 

மதானி - கைதியின் கதை டிசம்பர் 14, 2007

கோப்பு வகை: பொதுவானவை — சாரல் @ 12:33 நான்

சிறுபான்மையின மக்களின் மீது அரசு மற்றும் காவல்துறை நடத்தும் அத்துமீறல்கள் குறித்தான ஆவணப் படம்

மதானி - கைதியின் கதை