Posts Tagged ‘கருணாநிதி’
வெட்கமில்லாத கருணாநிதி
Posted திசெம்பர் 2, 2008
on:- In: பொதுவானவை
- 2 Comments
கருணாநிதி குடும்பம் ஒன்றாகி விட்டது. ஆனால் இவர்கள் குடும்ப சண்டையில் இறந்து போன மூன்று பேரின் குடும்பங்கள் நிலை என்ன ??
கருணாநிதியெல்லாம் தமிழினத்தலைவராம் ? வெட்கமில்லாத தலைவர், அவரை கொண்டாடும் மூளை இல்லாத உடன்பிறப்புகள்.
அழகிரிக்கும் – ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டியில் தொடர்ந்து பலர் பலியாகி இருக்கிறார்கள். வெளியே அதிகம் தெரியாமல் இறந்தவர்கள் எத்தனை பேரோ ?
அழகிரியால் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன். திமுகவின் முன்னணித் தலைவர்களில ஒருவரான தா.கிருட்டிணன், கருணாநிதி, இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். அடிமட்ட அளவிலிருந்து கட்சியின் முன்னணிப் பதவிகளுக்கு வந்தவர். தனிப்பட்ட வாழ்க்கையில் தா.கிருட்டிணனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சொத்துப் பிரச்சினை உள்பட எந்த விதப் பிரச்சினையும் இல்லாமல் அவர் இருந்து வந்துள்ளார். சொந்த ஊரிலும் நல்ல செல்வாக்கும், பெயரும் உள்ளவர்.
அழகிரி தன்னுடைய கூலிப்படை மூலம் உட்கட்சி பூசல் காரணமாக தா.கிருட்டிணனை கொலை செய்தார். ஆனால் கலைஞரும், ஸ்டாலினும் இது திமுக மீது களங்கம் ஏற்படுத்த ஜெயலலிதா செய்யும் சதி என்று கூறி தா.கிருட்டிணனுக்கு தூரோகம் செய்தனர்
அழகிரி – மாறன் சண்டையில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகின. அவர்களின் விபரம்
மதுரையில் அழகிரியின் அடியாட்கள் நடத்திய வெறியாட்டத்தில் பலியானவர்களில், கோபிநாத், வினோத்குமார் ஆகிய இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். தினகரன் அலுவலக கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்தனர்.
இவர்களில் கோபிநாத்தின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை. கீழக்கரையில் உள்ள முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று, எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பிரிவில் டிப்ளமோ பெற்றவர். இவரது தந்தை கோகுலதாஸ். இறப்பதற்கு முன்தினம்தான் தனது 25வது பிறந்த நாளை கொண்டாடினார், கோபிநாத்.
பலியான மற்றொரு இன்ஜினியர் வினோத்குமார் (24), மதுரை பைபாஸ் சாலையில் உள்ள வேல்முருகன் நகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை முருகேசன். சிவகங்கை மாவட்டம் திருமான்சோலையில் உள்ள பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் படித்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பி.இ. பட்டம் பெற்றவர், வினோத்குமார்.
மற்றொருவர் தினகரன் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் முத்துராமன்
அண்மைய பின்னூட்டங்கள்