மழைச் சாரல்

Posts Tagged ‘சென்னை சங்கமம்

“ஞாயிறு போற்றுதும்’ என்ற பிரமாண்டமான கலைநிகழ்ச்சியுடன் சென்னை சங்கமம் கலை விழா வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி- பண்பாட்டுத்துறை, தமிழ் மையம் ஆகி யவை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் கலைவிழாவை முதல்வர் கரு ணாநிதி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கலைஞர்களை அழைத்து வந்து சென்னையின் பல் வேறு இடங்களில் கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வர வேற்பை அடுத்து இரண்டாவது ஆண் டாக தற்போது பொங்கல் பண்டி கையை முன்னிட்டு சென்னை சங்கமம் கலைவிழா நடத்தப்படுகிறது.

தப்பாட்டமும்- டிரம்சும்…: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பழை மையும்-புதுமையும் சங்கமிக்கும் நிகழ்ச் சியாக ஞாயிறு போற்றுதும் கலை நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின் பாரம்பரிய இசையான தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட் டம், பொய்க்கால் குதிரை, கோலாட் டம் ஆகியவற்றுடன், நாட்டுப்புற இசையும், கர்நாடக இசையும், மேற்கத் திய இசையும் சங்கமித்த விழாவாக “ஞாயிறு போற்றுதும்’ கலை நிகழ்ச்சி அமைந்திருந்தது.
சுமார் 120 குழந்தைகள் பல்வேறு தொழில் சார்ந்த இசைக் கலைஞர்களு டன் ஒரே மேடையில் நடத்திய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தது.
போகிப் பண்டிகையில் தொடங்கி பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங் கல், காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகையின் 4 நாள் நிகழ்ச்சிகள் ஒரே மேடையில் 120 நிமிஷங்களில் கலை நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன.

பொங்கல் பண்டிகையின் பாரம்பரிய சிறப்புகளை விளக்கியதுடன், இந்த விழாக்கள் கால மாற்றங்களால் ஏற்பட் டுள்ள தவறுகளை சுட்டிக்காட்டியது டன், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இந்த விழாவை எப்படிக் கொண்டாட லாம் என ஆலோசனை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்தது அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெறும் வகையில் நிகழ்ச்சி அமைந்தி ருந்தது.

1300 கலைஞர்கள் அடுத்த ஒரு வாரத் துக்கு சென்னையின் பல்வேறு பூங்காக் களில் நடத்த உள்ள கலை நிகழ்ச்சிக ளின் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைந்திருந்தது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் கொட் டும் பனிப் பொழிவுக்கு இடையே 120 நிமிஷங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிறந்த இசை மழையாக இருந் தது என்றால் அது மிகையாகாது.

ஞாயிறு போற்றுதும் நிகழ்ச்சியை இயக்கிய குமரவேல், இசை அமைத்த பால் ஜேக்கப், அரங்கு வடிவமைத்த கதிர், பாடலாசிரியர் அறிவுமதி உள் ளிட்டோரை முதல்வர் கருணாநிதி பரி சுகள் வழங்கி பாராட்டினார்.

மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச் சியை தமிழ் மையத்தின் இயக்குநர் ஜெகத்காஸ்பர் தொகுத்து வழங்கினார்.

சென்னை சங்கமம் இணையத்தளம் – http://www.chennaisangamam.com/

குறிச்சொற்கள்: